கட்டுப்படுத்தப்படாத விருப்பங்களின் வெறுமை (பிரசங்கி 2: 9-11)
கட்டுப்படுத்தப்படாத விருப்பங்களின் வெறுமை (பிரசங்கி 2: 9-11):
‘பிரசங்கி’ புத்தகத்தின் ஆசிரியர் தன் வேலைப்பாடுகளில்
இருந்து செல்வங்கள் வரை எந்த அர்த்தத்தையும் அனுபவிக்கவில்லை, எனவே ஆசிரியர் தன்னுடைய
சுய பிரதிபலிப்பை தொடர்வதன் மூலம் முழுமையையும் அர்த்தமற்ற விஷயங்களாக கருதுகிறார்.
ஆசிரியர் தனது எண்ணங்களிலிருந்து வெளிவரும் விஷயங்களை உணர்ச்சிவசப்பட்டு பேசவில்லை,
மாறாக, ஆசிரியர் முழு சிந்தனையோடு, அவரிடம் இருக்கும் எல்லா ஞானத்தினாலும் அவற்றை சொல்கிறார்.
அவர் உயர்ந்த நிலையில் உள்ளார் எனவும், எருசலேமில் தனக்கு முன் இருந்த அனைவரையும் விட
எல்லா ஞானத்திலும் மிஞ்சிவிட்டார் என்றும் அவர் கூறுகிறார். சாலொமோனின் வாழ்க்கையில்,
அவருக்கு முன்பும் பின்பும் புத்திசாலித்தனமாகவும் அற்புதமாகவும் யாரும் இருக்க மாட்டார்கள்
என்று கடவுளே அவரை ஆசீர்வதித்தார். மேலும், ஞானத்தின் காரணி இல்லாமல் ஒரு மனிதன் இன்பம்
தரக்கூடிய மற்றும் உண்மையில் நிலையான இன்பத்தை அடையாளம் காண முடியாது. ஞானம் இல்லாமல்,
கட்டுப்படுத்தப்படாத உணர்வுகள் ஒருபோதும் திருப்தியும் முழுமையும் அடைய உதவாது, மற்றும்
அதை அறியாமல் ஒரு நபர் தொடர்ந்து இன்பத்தைத் தேடுவார். ஆசிரியர் ஒரு ஞானி, எனினும்
கட்டுப்படுத்தப்படாத உணர்ச்சிகளைக் கொண்டிருந்தார், அது அவரது ஆசைகள், உணர்ச்சிகள்
மற்றும் உடல் சார்ந்த காரியங்களை ஒருபோதும் பூர்த்தி செய்யவில்லை.
மேலும், ஆசிரியர் தனது இதயத்தின் உணர்வுகளிலிருந்தும்
கண்களின் இச்சைகளிலிருந்தும் தன்னை ஒருபோதும் தடுக்கவில்லை. அவர் தனது கண்கள் விரும்பியதை
அவற்றிடமிருந்து விலக்கவில்லை என்று கூறுகிறார். ஒரு நபர் சில பணிகளை வெற்றிகரமாக முடிக்கும்போது
நிச்சயமாக மகிழ்ச்சியும் இனிமையும் இருக்கும், ஆனால் அது நீடிக்காமல் இருக்கலாம். அவருக்கு
இன்பம் என்று தோன்றியவற்றிலிருந்து அவர் ஒருபோதும் தனது இதயத்தை ஒதுக்கி வைத்திருக்கவில்லை
என்றும், உழைப்பு அவருக்கு தகுந்ததாக இருந்தது என்றும், அவர் தேடிய மேலும் மகிழ்ச்சியை
அளித்ததாகவும், அதை அவர் உழைத்ததற்கான வெகுமதியாகக் கருதினார் என்றும் ஆசிரியர் கூறுகிறார்.
வியப்பதிலும், நிறைவேற்றுவதிலும், இலக்குகளை அடைவதிலும் எப்போதும் இன்பங்கள் உள்ளன,
ஆனால் கட்டுப்படுத்தப்படாத உணர்ச்சிகளின் வரம்புகள் உணரப்படாமல் அது திசையற்றதாக இருக்கும்போது,
பொதுவான நன்மையும் நலன்களும் இல்லாமல் சுயநலம் நிறைந்திருப்பதால் எல்லா நேரங்களிலும்
ஒரு பயன் கிடைப்பினும் அது மகிழ்ச்சியளிக்காது.
ஆசிரியரின் இதயம் இன்பம் காணும்போது உழைப்பிற்கு
ஒரு வெகுமதி இருப்பதாக அவர் உணர்ந்தாலும், எல்லாமே வீண் என்றும் காற்றை துரத்துவது
போன்றது என்றும் கருதுகிறார். அவரது கைகள் செய்த அனைத்தையும், இன்பங்களையும் வெகுமதிகளையும்
அடைவதற்கான அவரின் உழைப்புகளையும் கருத்தில் கொள்ளும்போது, ஒரு மனிதனாக தனது வரம்பை
அவர் அறிந்திருந்ததால் திருப்திகரமாக அவர் உணரவில்லை. கடவுள் இல்லாமல் எல்லாவற்றையும்
மாயை என்றும் காற்றை துரத்துவது போன்றது என்றும் அதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும்
ஆசிரியர் உறுதிப்படுத்துகிறார்.
சுய பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்:
1. ஆசிரியர் தன்னை எவ்வாறு விவரிக்கிறார்?
ஏன்?
2. ஆசிரியரிடம் என்ன இருந்தது? அது அவருக்கு
எவ்வாறு உதவியாக இருந்தது?
3. கண்களின் இச்சைகளைப் பற்றி ஆசிரியர் என்ன
கூறுகிறார்?
4. ஆசிரியர் தனது இதயத்தை எவ்வாறு வைத்திருந்தார்?
5. ஆசிரியரின் அனைத்து உழைப்பிற்குமான பயன்
என்ன? எப்படி?
6. ஆசிரியர் கருத்தில் கொண்டு முடிவாக கூறும்
காரியங்கள் யாவை? ஏன்?
7. விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்
என்ன முடிவுக்கு வருகிறார்?
8. ஆசிரியர் எல்லாவற்றையும் ஏன் மாயை என்று
கூறுகிறார்?
9. ஞானம் நமக்கு எவ்வாறு உதவியாக இருக்கும்
என்று நினைக்கிறீர்கள்?
10. பயன்களிலும் இன்பங்களிலும் நாம் எவ்வாறு
அர்த்தங்களை காணலாம்?
Comments
Post a Comment