Posts

Showing posts from October, 2020

மகிழ்ச்சியற்ற செயல்பாடுகளும் காற்றை பின் தொடர முயற்சித்தலும் (பிரசங்கி 1: 12-15)

  மகிழ்ச்சியற்ற செயல்பாடுகளும் காற்றை பின் தொடர முயற்சித்தலும் (பிரசங்கி 1: 12-15): பொதுவான மற்றும் தனிப்பட்ட கவனித்தறிதலுக்கு பிறகு, ஆசிரியர் தனது சொந்த அனுபவம் அல்லது வெளிப்பாட்டிற்கு ஏற்ப அது தொடர்பான காரியங்களை விளக்குகிறார். விஷயங்களை விளக்கும் பொருட்டு, ஆசிரியர் மீண்டும் தன்னை எருசலேமில் இஸ்ரவேலின் போதகராகவும் ராஜாவாகவும் அறிமுகப்படுத்துகிறார். அவர் வெறும் உணர்ச்சிகளினால் விஷயங்களை விளக்குவது மட்டுமல்லாமல், கவனமாக சிந்தித்து உணர்ந்தபின் வாசகர்கள் உணர உதவுவதற்காக அவர் அதைச் செய்கிறார். ஒரு ராஜாவாக அறிவு, செல்வம், திறமைகள், ஞானம், உயர்நிலை மற்றும் சுற்றியுள்ள இயற்கையான மனிதன் அனுபவிக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் ஆசிரியர் அதிகமாக பெற்றுள்ளார். ராஜாவின் கண்களுக்கு வெளியே இருக்கக்கூடிய காரியம் எதுவும் இருக்காது, மேலும் அவரது அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்து சலுகைகளையும் பெறுகிறார். ஆக்கியோன் தான் அறிந்த மற்றும் அனுபவித்தவற்றிலிருந்து உண்மையான விஷயங்களைத் தேட தனது இதயத்தைப் பயன்படுத்தியதாக கூறுகிறார். மேலும், ஆசிரியர் தனது ஞானத்திலிருந்து வானத்தின் கீழ் செய்யப்படும் எல்லாவற்றையும்...

புதியதும் நினைவிலிருப்பதும் எதுவும் இல்லை (பிரசங்கி 1: 9-11):

புதியதும் நினைவிலிருப்பதும் எதுவும் இல்லை ( பிரசங்கி  1: 9-11): கடவுள் மனிதனை தனது சொந்த சாயலில் படைத்ததால், கடவுளிடமிருந்து பெறப்பட்ட குணாதிசயங்களில் ஒன்றான அவரின் படைப்பாற்றல், மனிதனின் வரலாற்றில் அவர்கள் மாற்றத்திற்கு உள்ளாக அதிக வாய்ப்பளிக்கிறது. இதற்கு முன், ஆசிரியர் மீண்டும் மீண்டும் சில சுழற்சிகளை வெளிப்படுத்துகிறார், மேலும் மனிதன் ஒருபோதும் தனக்குத்தானே எதிலும் திருப்தி ஆகாததால் எல்லாவற்றையும் சோர்வாகக் கருதுகிறான். நடக்கும் விஷயங்களின் சுழற்சி பூமியில் இயற்கையாகவே நிகழ்வதால், சூரியனுக்குக் கீழே புதிதாக எதுவும் இல்லை என்று ஆசிரியர் கூறுகிறார். ஆசிரியரின் காலத்தில் என்ன நடந்ததோ அது அவரது வாழ்நாளுக்குப் பிறகு நடக்கும் என்று அவர் கூறுகிறார், அது முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று வெளிப்படுத்துகிறார். மேலும, அவர் காலக்கட்டத்தில் செய்யப்படும் அனைத்தும் அவருக்குப் பிறகும் செய்யப்படும் என்று ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். அவர் வெறுமனே தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு மனிரும் முன்பு யாரோ செய்ததைப் போல பல விஷயங்களில் தங்களைத் திருப்திப்படுத்த கடுமையாக பாடுபடுகிறார...