மகிழ்ச்சியற்ற செயல்பாடுகளும் காற்றை பின் தொடர முயற்சித்தலும் (பிரசங்கி 1: 12-15)
மகிழ்ச்சியற்ற செயல்பாடுகளும் காற்றை பின் தொடர முயற்சித்தலும் (பிரசங்கி 1: 12-15):
பொதுவான மற்றும்
தனிப்பட்ட கவனித்தறிதலுக்கு பிறகு, ஆசிரியர் தனது சொந்த அனுபவம் அல்லது வெளிப்பாட்டிற்கு
ஏற்ப அது தொடர்பான காரியங்களை விளக்குகிறார். விஷயங்களை விளக்கும் பொருட்டு, ஆசிரியர்
மீண்டும் தன்னை எருசலேமில் இஸ்ரவேலின் போதகராகவும் ராஜாவாகவும் அறிமுகப்படுத்துகிறார்.
அவர் வெறும் உணர்ச்சிகளினால் விஷயங்களை விளக்குவது மட்டுமல்லாமல், கவனமாக சிந்தித்து
உணர்ந்தபின் வாசகர்கள் உணர உதவுவதற்காக அவர் அதைச் செய்கிறார். ஒரு ராஜாவாக அறிவு,
செல்வம், திறமைகள், ஞானம், உயர்நிலை மற்றும் சுற்றியுள்ள இயற்கையான மனிதன் அனுபவிக்கும்
நிகழ்வுகள் அனைத்தையும் ஆசிரியர் அதிகமாக பெற்றுள்ளார். ராஜாவின் கண்களுக்கு வெளியே
இருக்கக்கூடிய காரியம் எதுவும் இருக்காது, மேலும் அவரது அதிகாரத்தின் கீழ் உள்ள
அனைத்து சலுகைகளையும் பெறுகிறார்.
ஆக்கியோன் தான்
அறிந்த மற்றும் அனுபவித்தவற்றிலிருந்து உண்மையான விஷயங்களைத் தேட தனது இதயத்தைப் பயன்படுத்தியதாக
கூறுகிறார். மேலும், ஆசிரியர் தனது ஞானத்திலிருந்து வானத்தின் கீழ் செய்யப்படும் எல்லாவற்றையும்
கவனித்தார். இதயத்திலிருந்து உண்மையான உணர்வுகளோடு இயல்பான தூண்டுதல், மற்றும் ஞானத்தின்
மூலம் மனதில் இருந்து விஷயங்களை பகுப்பாய்வு செய்துள்ளார். நிச்சயமாக ஏராளமான அறிவும்
ஞானமும் கொண்டிருக்கும் எழுத்தாளர், ராஜாவாக இருப்பதும், அவருடைய ராஜ்யத்தின் கீழ்
பல விஷயங்களை அறிந்தும், அனுபவித்தும் உள்ளார். தன்னிடம் இருந்த அனைத்தையும் பயன்படுத்துவதைப்
பற்றி அவர் அதிகம் யோசிக்கவில்லை, ஆனால் அவருக்கு அது மகிழ்ச்சி அளிக்கும் என்பதால்
வெளிப்படையான மனதுடன் முயன்றார். ஞானத்தால் நிர்வகிக்க, ஆட்சி செய்ய மற்றும் பராமரிக்க,
பூமியின் முழு முகத்திலும் நடக்கும் விஷயங்களை ஆசிரியர் கவனித்தார். ஆசிரியரால் புரிந்து
கொள்ளப்பட்டபடி, எல்லாவற்றிலும் மனிதன் எப்பொழுதும் ஏதாகிலும் செய்துக் கொண்டிருக்க
கடவுள் கொடுத்த ஒரு மகிழ்ச்சியற்ற செயல்பாடுகளாக அவை காணப்பட்டது. மக்கள் பார்வையில்
தகுதியானவை மற்றும் அளவிடமுடியாதவை எனக் கருதப்படுபவை அனைத்தையும் ஆசிரியர் கவனித்தார்,
ஆனால் பெரும்பான்மையான மக்கள் செய்யும் காரியங்களால் ஆசிரியர் திருப்தி அடையவில்லை.
பெரும்பாலும், ஆண்கள் தங்கள் சமூக நிலையை பாதுகாப்பதற்காக அல்லது வாழ வேண்டிய அவசியத்திற்கு
வெளியே ஏதாவது செய்கிறார்கள். மனிதன் விஷயங்களைத் தேர்ந்தெடுத்தாலும், கடவுளைப் பற்றிய
அறிவு எல்லாவற்றிலும் நீடிக்கிறது என்று சொல்லும் அளவுக்கு ஆசிரியர் தாழ்மையானவர்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடவுள் ஒவ்வொரு மனிதனையும் தனது சாயலில் படைத்திருப்பதால்
அவனுக்கு சலுகைகளையும் பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். கடவுளுடன் எந்த உறவும்
இல்லாதபோது, சலுகைகள் மற்றும் பொறுப்புகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அல்லது
புரிந்து கொள்ளப்படாது.
சூரியனின் கீழ்
செய்யப்படும் எல்லாவற்றையும் பார்த்தேன் என்றும், அவை அனைத்தும் வீணானதாகவும், காற்றிற்கு
பின் செல்வதை போல பாடுபடுவதாக தெரிகிறது என்றும் ஆசிரியர் முன்பு கூறிய விஷயங்களை மீண்டும்
மீண்டும் கூறுகிறார். ஆசிரியரின் கூற்றுப்படி, சுழற்சிகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன,
எல்லா விஷயங்களும் சோர்வு நிறைந்தவை. விஷயங்கள் நினைவில் வைக்கப்பட்டிருப்பதும் இல்லை,
அனைத்தும் மகிழ்ச்சியற்ற செயல்பாடுகளாகும். பூமியில் நடக்கும் ஒவ்வொரு செயலும் அர்த்தமற்றது
மற்றும் மனிதர்களின் வாழ்க்கைக்கு ஒரு முடிவு உண்டு, அவை வெவ்வேறு திசைகளில் பாயும்
கணிக்க முடியாத காற்றை பின்பற்றுவது போன்றது. மேலும், வளைந்திருப்பதை நேராக்க முடியாது
என்று ஆசிரியர் வெளிப்படுத்துகிறார், இது மிகவும் உண்மை. கடவுளிடமிருந்து வந்த சில
விஷயங்களில் மனிதர்களாகிய நாம் வெளிப்புற ஆதரவு இல்லாமல் நிலைத்து நிற்கத் தவறிவிடுகிறோம்.
அறிவியல், கலை மற்றும் தத்துவம் போன்ற ஒவ்வொரு துறையிலும் சில இடைவெளிகள் உள்ளன, அவை
முழுமையற்ற தன்மையை உருவாக்குகின்றன, மேலும் குறைபாடுடன் இருப்பதை கணக்கிட முடியாது
என்று ஆசிரியர் கூறுகிறார். நேராக்கி நிரப்புவதன் மூலம் கடவுள் மட்டுமே சில விஷயங்கள்
வழங்கவும், வளர்க்கவும், நேற்மறையாக மாற்றவும் முடியும்.
சுய பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்:
1. ஆசிரியர் தன்னைப் எப்படி அறிமுகப்படுத்துகிறார்? அவர் ஏன் அதை மீண்டும் செய்கிறார்?
2. வானத்தின் கீழ்
செய்யப்படும் எல்லாவற்றையும் குறித்து ஆசிரியர் என்ன செய்கிறார்?
3. வானத்தின் கீழ்
செய்யப்படும் எல்லாவற்றையும் குறித்து ஆசிரியரின் உணர்வு என்ன?
4. எல்லாவற்றிலும்
ஏதாவது செய்து கொண்டிருப்பது என்பது, எப்படி மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்த ஒரு மகிழ்ச்சியற்ற
செயல்பாடாக இருக்க முடியும்?
5. ஆசிரியர் ஏன்
எல்லாவற்றையும் வீண் என்றும் காற்றை பின் தொடருவது போல பாடுபடுவது என்றும் குறிப்பிடுகிறார்?
6. ‘வளைந்திருப்பது' மற்றும் ‘இல்லாதிருப்பது’ பற்றி ஆசிரியர் என்ன கூறுகிறார்?
7. வளைந்திருப்பதை
ஏன் நேராக்க முடியாது மற்றும் இல்லாததை ஏன் கணக்கில் கொள்ள முடியாது?
8. மகிழ்ச்சியற்ற
செயல்பாடுகளை எவ்வாறு மகிழ்ச்சியாக மாற்றலாம் மற்றும் வீணானதை எப்படி அர்த்தமுள்ளதாக
மாற்ற முடியும்?
Comments
Post a Comment